மஹிந்தவுக்கு கிராம மட்டத்தில் இருந்து வந்த ஆதரவு அலை தற்போது ஜனாதிபதி பக்கம் !

mahinda-maithri-970x623
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு கீழ் மட்டத்தில் இருந்து வந்த ஆதரவு அலை தற்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே இருப்பதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். 

கடந்த காலத்தில் காணப்பட்ட மஹிந்த ராஜபக்ஸ அலையில் சிக்கிய கிராம மட்டத்திலான பிரதிநிதிகள், தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்துவதில் பங்கெடுக்காமல், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கட்சி வெற்றி பெற பங்களிப்பை வழங்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய இதன்போது குறிப்பிட்டுள்ளார்.