எமது கட்சியில் பயணிக்கும் அரசியல்வாதிகள் பணியாற்றவில்லையென்றால் தேர்தல்களில் அவர்களை நிராகரித்துவிடுங்கள்: ரிஷாட்

 

ஊடகப்பிரிவு 

 

கட்சிகளும் சின்னங்களும் அவற்றின் நிறங்களும் மார்க்கமெனநம்மவர்களில் சிலர் கருதும் போக்கு இல்லாமல் போனால்தான்நமது சமூகம் விமோசனம் பெறும். கட்சிகள் விடும் தவறுகளைதட்டிக் கேட்கும் திராணியும் நமக்கு இருக்க வேண்டும்இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

12825559_216407492046531_1597437235_n_Fotor

 

புத்தளம் அக்கரவெளியில் இடம்பெயர்ந்து வாழும் அடம்பன்பள்ளிவாசல்பிட்டி அகதிகளை சந்தித்து கலந்துரையாடியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

 

மக்களின் தேவைகளை நிறைவேற்றவே நாம் அரசியல்செய்கின்றோம். எமது கட்சியில் பயணிக்கும் அரசியல்வாதிகள்மக்களுக்கு பணியாற்றவில்லையென்றால் அவர்களால்சமூகத்துக்கு பயன் கிட்டாவிட்டால் தேர்தல்களில் அவர்களைநிராகரித்துவிடுங்கள். பெயருக்காக, புகழுக்காக கட்சிஅரசியலை நாம் நடாத்த விரும்பவில்லை. இடம்பெயந்தமக்கள் படுகின்ற கஷ்டங்கள் கொஞ்ச நஞ்மல்ல.

அகதி முகாமிலிருந்த நான் அரசியலுக்குள் வந்த நோக்கம்மக்களின் கஷ்டங்களை போக்கவே. நான் வகித்த பதவியைஇராஜினாமா செய்துவிட்டு ஏதோ ஓர் அசட்டுத்துணிவில்இறைவனை முன்னிறுத்தி அரசியலுக்குள் வந்தேன, நான்அரசியலில் ஈடுபடுவேன் என ஒருபோதும்நினைத்திருக்கவில்லை. இறைவனின் நாட்டம்இதுவாகவிருந்தது. குறுகிய காலத்தில் எமது கட்சி வளர்ந்துவிருட்சமாகியுள்ளது. அரசியலில் நான் என்றுமே வீறாப்புப்பேசியதில்லை. ”சாரதியும் நானே நடத்துனரும் நானே” என்றுகூறிக் கூறி நாம் மமதை அரசியல் நடத்தவும் விரும்பவுமில்லை.இவ்வாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

12825225_216407498713197_1473349115_n_Fotor

இந்த சந்திப்பை வடமாகாண மஜிலிஸுஷ் ஷூராத் தலைவரும்தில்லையடி முஹாஜிரின் அரபுக்கல்லூரி ஸ்தாபகப்பணிப்பளரும் அதிபருமான அஷ்ரப் முபாரக் (ரஷாதி) ஏற்பாடுசெய்திருந்தார்.

இந்த சந்திப்பில் பங்கேற்ற அகதிமக்கள் அக்கரவெளியில் தாம்எதிர் நோக்கும் கஷ்டங்களை எடுத்துக்கூறினர்.அக்கரவெளியில் சிறுவர் பூங்கா ஒன்றையும் தமது மாணவர்கள்கல்வி கற்கும் தாரக்குடிவில்லு முஸ்லிம் வித்தியாலயத்திற்குகட்டிடம் ஒன்றையும் அமைத்து தருமாறு கோரிக்கைஒன்றையும் விடுத்தனர். மீளக்குடியேற விரும்புவோருக்குவசதிகளை ஏற்படுத்தித் தருமாறும் அவர்கள் வேண்டினர்.