17ம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ள பாரிய கூட்டத்தில் நிச்சயமாக பங்கேற்பேன் !

mahintha rajapakse

 

புதிய அரசியல் கட்சியொன்று உருவாக்கப்பட உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்புப் பிரிவாக இந்தக் கட்சி அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
எதிர்வரும் 17ம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ள பாரிய கூட்டத்தில் நிச்சயமாக தாம் பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் நாட்களில் உருவாக்கப்பட உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான அமைப்பாக செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.