ஜனாதிபதி மைத்திரி அதிரடி , மேலும் 56 பேரை அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்க தீர்மானம் !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் என 56 பேரை அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

slfp1

 

அமைப்பாளர்கள் பதவிகளில் இருந்து நீ்க்கப்படவிருக்கும் அனைவரும் மகிந்தவுடன் எழுவோம் என்ற அமைப்பில் செயற்பட்டு வருபவர்கள் என தெரியவந்துள்ளது.

கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சிலர் அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். 

மகிந்த ராஜபக்ச தலைமையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினர் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க போவதாக தகவல்கள் வெளியாக நிலையில், அவர்களை கட்சியின் பதவிகளில் இருந்து நீக்க, கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.