அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் அடிப்படை சம்பளத்துடன் இணைக்க நடவடிக்கை : ரஞ்சித்

Unknown
அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கொடுப்பனவுகள் அடிப்படை சம்பளத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக பொதுநிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
மேலும், 2006ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுள்ள பல்வேறு கொடுப்பனவுகளையும் அடிப்படை சம்பளத்துடன் இணைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் அரச சேவையாளர்களின் சம்பளம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.