(வீடியோ) பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் பாறை போன்று உறைந்த நிலையில் மனித உருவம் !

31AED85700000578-0-image-a-1_1456734300056_Fotor

 

பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் மீனவர்களால் கண்டெடுக்கப்பட்ட மர்ம படகில் பாறை போன்று உறைந்த நிலையில் காணப்பட்ட மனித உருவம் சர்ச்சையை ஏற்பட்டுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் சுரிகாவோ டெல் மாகாணத்தில் அமைந்துள்ள கடற்பகுதியில் இருந்து சில மீனவர்களால் மர்ம படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

அந்த மர்ம படகினுள் சென்று பார்வையிட்ட மீனவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் பாறை போன்று உறைந்த நிலையில் ஒரு மனித உருவத்தை கண்டெடுத்துள்ளனர்.

மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ள அந்த மனித உருவம் வரண்ட கடற்காற்று, கடுமையான வெப்பம், உப்பு கலந்த காற்று ஆகிய காரணங்களால் பாறைபோல உறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேஜை மீது சாந்த நிலையில் காணப்பட்ட அந்த மனிதர் ஜேர்மனி நாட்டின் சாகச பயணியான Manfred Fritz Bajorat என கண்டறிந்துள்ளனர்.

PHILIPPINES GERMAN SAILOR FOUND DEAD

 

Sayo என பெயரிடப்பட்டுள்ள தனது படகில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் கடைசியாக இவர் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

திறைமைசாலியான Manfred கடும் புயல் காலங்களில் கண்டிப்பாக சாகச பயணம் மேற்கொண்டிருக்க வாய்ப்பு இல்லை என அவரை நன்கு அறிந்த மாலுமிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மேஜை மீது சாய்ந்த நிலையில் காணப்படுவதால், இருதயம் தொடர்பான நோயால் உயிரிழந்திருக்கலாம் எனவும்,

அவரது படகில் வேறு நபர்களோ, கொலை ஆயுதங்களோ எதுவும் விசாரணை அதிகாரிகளால் கண்டெடுக்கப்படவில்லை,

இதனால் அவரை கொலை செய்திருக்கவும் வாய்ப்புகள் இல்லை எனவும் பொலிசார் முடிவுக்கு வந்துள்ளனர்.

தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள புடுவான் நகரில் மருத்துவ ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், ஜேர்மனியில் உள்ள அவரது குடும்பத்தினரை தேடும் பணி துவங்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

31B612A200000578-0-image-a-7_1456773078088_Fotor