நேபாளத்தில் தனியார் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 23 பேர் பலி!

நேபாள நாட்டில் தலைநகரான காத்மாண்டுவில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் மேற்கேயுள்ள சுற்றுலாத்தலமான போக்காராவில் இருந்து ஜாம்சான் நகருக்கு புறப்பட்டுச் சென்ற தனியாருக்கு சொந்தமான சிறியரக விமானம் இன்று காலை மாயமானது.

204c1130-f3d3-423f-8d57-3e547bfc835a_S_secvpf

போக்காரா நகரில் இருந்து புறப்பட்ட 20 நிமிடங்களுக்குப் பின்னர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த ‘தாரா ஏர்’ நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் இரண்டு வெளிநாட்டினர் இரு குழந்தைகள் உள்பட மொத்தம் 20 பயணிகளும், விமானி உள்பட 23 பேர் இருந்ததாக தெரியவந்தது.

இந்நிலையில், அந்த விமானம் ஒரு மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிக் கிடப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதில் சென்ற 23 பேரும் உயிரிழந்ததாகவும் நேபாள நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சகம் இன்று பிற்பகல் அறிவித்துள்ளது.