சிங்கள / ஆங்கில மொழிமூல மாணவர்களும்  குத்பாக்களும் !

keep-calm-and-enjoy-jummah

அபூபிலால் பர்ஸான்

 

கொழும்பில் உள்ள பல மஸ்ஜித்களுக்கு ஆங்கில/சிங்கள மொழிகளில் கற்கும் ஏராளமானமாணவர்கள் ஜும்ஆவுக்கு வருகிறார்கள்பெரும்பாலான போது அவர்கள்கததைத்துக்கொண்டும்சுற்றித்திரிந்துகொண்டும், Mobile போன்களில்விளையாடிக்கொண்டும் இருப்பார்கள். 

 

நேற்றும் அப்படித்தான் கொழும்பில் ஒரு மிக முக்கிய மஸ்ஜித் ஒன்றில் ஒரு மாணவர்கள்குழு மஸ்ஜிதின் வுழு செய்யும் பகுதியில் குழுவாக இருந்துகொண்டு புகைப்படம்எடுத்துகொண்டிருந்தார்கள்குத்பா நடந்துகொண்டிருந்ததுகுத்பா முடிந்த பின்னர்அவர்களை அணுகி ஏன் பள்ளியினுள் இருக்காமல் ஏன் புகைப்படம்எடுத்துக்கொண்டிருந்தீர்கள் என்றேன்அதற்கு ஒரு மாணவன் நான் எனதுநண்பனைத்தானே புகைப்படம் எடுத்தேன் என்றான்அவர்கள் செய்த தவறைசுட்டிக்காட்டிய போது அங்கிள் எனக்குத் தமிழ் தெரியாது‘ என்று சொன்னான்.  இம்மஸ்ஜிதிற்கு சுமார் ஆங்கில மொழியில் கற்கும் சுமார் 300 மாணவர்கள்வருகிறார்களாம். 

 

இம்மாணவர்கள் குத்பாவில் கவனம் செலுத்தாமல்மஸ்ஜித் ஒழுங்குகளைப் பேணாமல்இருப்பதற்கு  பின்வரும் நான்கு பிரதான  காரணங்களை அடையாளப்படுத்தலாம். 

  1. தமிழில் செய்யப்படும் குத்பாக்கள் விளங்குவதில்லை (பல மாணவர்களை அணுகிக்கதைத்திறேன்அவர்களுக்கு தமிழில் அரபுஹிந்தி போல விளங்குவதில்லை – இதைமஸ்ஜித் நிருவாகிகள்கதீப்மார்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்)
  2. உண்மையிலே அவர்களுக்கு குத்பாவின் போது மஸ்ஜிதினுள் அமைதியாகஇருக்கவேண்டும் என்பது தெரியாது ( இந்த அறிவு பாடசாலையிலோவீட்டிலோமச்ஜிதிலோ கிடைப்பதில்லை – பல மாணவர்களுக்கு இஸ்லாம் கிடைக்கக்கூடியஒரே சந்தர்ப்பமாக குத்பாவே அமைகின்றன)
  3. முன்பு போன்று பிள்ளைகளைக் கையேடு மஸ்ஜிதுக்கு கூட்டிச்சென்றுஇவற்றையெல்லாம் சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு பெற்றோருக்கு நேரமுமுல்லைசந்தர்ப்பமும்அமைவதில்லை
  4. இவை எல்லாவற்றுக்கும் மேலாகமுன்மாதிரியாக இருக்க வேண்டிய மஸ்ஜித்நிருவாகிகள் மஸ்ஜிதின் கீழ் மாடியிலும்மஸ்ஜிதுக்கு வெளியேயும் குழுக்குழுவாகஇருந்துகொண்டு குத்பா முடியும் வரை கதைத்துக்கொண்டிருப்பது. (தகுதியானமஸ்ஜித் நிருவாகிகள் இல்லாமை ஒரு பிரச்சினையே) 

சமூகத்தின் எதிர்கால சந்ததி இவ்வாறு வழிகாட்டல் இன்றி வளர்வது மிகவும் ஆபத்தானதுஅல்லாஹ்வின் கட்டளைகள் இவ்விளம் சந்ததியினருக்கு பெறுமதியற்றதாகக மாறுகிறதுஅதனால் மார்க்கம் ஒரு சடங்காக மாறிவிடும்இந்நிலை பெரும்பான்மை சமுகத்துக்கு்ஏற்கனவே நடந்துவிட்டது. 

இதனை நிவர்த்திசெய்ய நீண்டகாலத் தீர்வுகள் அவசியம். 

உதாரணமாக பின்வருவன தீர்வுகளாக அமையலாம்.

  1. ஒரு பிரதேசத்தில் உள்ள பல மஸ்ஜித்களில் ஒன்றை சிங்களஆங்கில மொழிக்குத்பாவுக்கென்றே ஒதுக்கிவைக்கலாம்.
  2. தமிழில் நடைபெறும் குபாக்களின் இறுதியில் அன்றைய குத்பாவின் சாராம்சத்தைஆங்கில/சிங்கள மொழியில் 10 நிமிடத்திற்கு சொல்லலாம்அவ்வாறு  முடியாதவர்கள் இதனை பார்த்து வாசித்தாலே போதுமானதுசிங்களஆங்கிலமொழிப்புலமையுள்ள உலமாக்கள் உருவாகுவது காலத்தின் தேவையாகும்.
  3. சிங்களஆங்கில மொழிகளில் மாணவர்களுக்கு விளங்கும் வண்ணம் மஸ்ஜித்ஒழுங்குகள் பற்றி ஒரு விளக்கத்தை அனைத்து மஸ்ஜித்களிலும் காட்சிப்படுத்தல்.
  4. குத்பவில் தமிழில் சொல்லப்பட்ட விடயங்களை ஆங்கிலசிங்கள மொழியில்அச்சிட்டு வழங்கலாம். 

இந்நிலைமையை எவ்வாறு சீர்செய்யலாம்உங்கள் கருத்துகளையும்பகிர்ந்துகொள்ளுங்கள். 

எமது சமூகத்தை நீண்டகால ரீதியில் பாதிக்கக்கூடிய இப்பிரச்சினைக்கு கொழும்பில்உள்ள ஒரு தஃவா அமைப்போகுழுவோ முன்வந்து தீர்வு காண்பது மிகமிகஇன்றியமையாததாகும்