ஜனாதிபதி மைத்திரிபால ஆஸ்திரியா விஜயம் !

maithiriஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆஸ்திரியா நாட்டிற்கான விஜயத்தின் முதல் நாள் இன்றாகும். 

ஜேர்மனிக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அந்த விஜயத்தை நேற்று நிறைவு செய்துகொண்டு ஆஸ்திரியா நோக்கி சென்றார். 

ஜனாதிபதி ஜேர்மனிக்கான தனது விஜயத்தின் போது அந்தநாட்டு சென்சியூலர் ஏஞ்சலா மேர்கல் உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்திருந்ததுடன், பல்வேறு முக்கிய உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டது. 

இவேளை தனது ஆஸ்திரியா விஜயத்தின் போது அந்நாட்டு ஜனாதிபதி ஹெய்ன் பிஷ்கர் உட்பட அதிகாரிகள் பலரை ஜனாதிபதி சந்திக்க உள்ளார். 

ஸ்த்திரியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் ஜனாதிபதி இவ்விஜயத்தை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.