பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது !

maithiri

வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொண்டு பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளுக்கு தேவையான வளங்களை வழங்கி அறிவுசார் மாணவர் சமூகத்தை கட்டியெழுப்பவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மின்னேரியா தேசிய பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொனறின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.