என்னுடன் விவாதம் புரிய அனுர குமார தயாரா ? : விமல் வீரவன்ச !

anura kumara

நாட்டின் எந்த விடயமாக இருந்தாலும் பகிரங்கமா விவாதத்திற்கு வருமாறு மக்கள் விடுதலை முன்னணி தற்போதைய தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு சவால் விடுப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு ஒளிப்பரப்பான அரசியல் நேர்காணல் நிகழ்ச்சியில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி நல்லாட்சி அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கு உச்சளவில் பங்களிப்பு செய்து வருகிறது.

இதனை மறைத்து மக்களை தவறாக வழிநடத்துவதற்காக பொய்யாக அரசாங்கத்தை விமர்சித்து இரட்டை நிலைப்பாட்டை கையாண்டு வருகிறது எனவும் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.