மஹிந்த தலைமையில் நேற்றிரவு புதிய கட்சி தொடர்பான கலந்துரையாடல் !

mahindha-angry_Fotor
கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் உருவாக்கப்படவுள்ள புதிய கட்சி தொடர்பான இறுதித் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் கலந்துரையாடல் ஒன்று நேற்றிரவு நடைபெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மிரிஹானை இல்லத்தில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலின் போது கூட்டு எதிர்க்கட்சியின் ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். 

தற்போதைக்கு புதிய கட்சி தொடர்பான அனைத்து விடயங்களும் நேற்றிரவு நடைபெற்ற கலந்துரையாடலில் இறுதி முடிவெடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் அனைத்துப் பதவிகளுக்கும் பொருத்தமானவர்களின் பெயர்களும் பிரேரிக்கப்பட்டுள்ளது. 

புதிய கட்சியின் இலச்சினை, அலுவலக முகவரி என்பன குறித்தும் இக்கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் கலந்துரையாடலில் கலந்து கொண்ட அனைவரும் புதிய கட்சியின் தலைமைத்துவத்தை மஹிந்த ராஜபக்ச ஏற்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர். 

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் புதிய கட்சியைப் பதிவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெறவுள்ளதாகவும் நம்பகமான தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.