கூட்டு எதிர்க்கட்சியினர் இன்று சீனிகம தேவாலயத்தில் தேங்காய் உடைத்து சாபமிட்டனர் !

அரசாங்கம் மற்றும் நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணை ஆணைக்குழு என்பவற்றுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் இன்று சீனிகம தேவாலயத்தில் தேங்காய் உடைத்து சாபமிட்டனர்.

இதில் மகா சங்கத்தினரும் பொதுமக்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டுள்ளனர். 

கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள தினேஷ் குணவர்தன, குமார வெல்கம, ரமேஷ் பத்திரன, நாமல் ராஜபக்ச உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். 

இதேவேளை, கூட்டு எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேசப்பற்று தேசிய முன்னணியின் ஏற்பாட்டில், அதே தேவாலயத்தில் தேங்காய் உடைத்து வணக்க வழிபாட்டில் ஈடுபட்டனர். 

இதனால், சீனிகம தேவாலயம் மக்களால் நிரம்பி காணப்பட்டதாகவும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.