தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடியமையானது பிரிவினைவாதத்திற்கு அரசாங்கம் அடிபணிந்தமையாகும் !

mussamil  
 தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடியமையானது பிரிவினைவாதத்திற்கு அரசாங்கம் அடிபணிந்தமையாகும் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில், பல மொழிகள், பல இனங்கள் இருக்கும் இந்தியாவில் ஒரு தேசிய கீதமே உள்ளதாகவும் இதனை ஏன் இலங்கையில் செய்ய முடியாது எனவும் கூறியுள்ளார். 

தேசிய கீதத்திற்கு மரியாதை வழங்கும் மனநிலை இல்லையென்றால், அங்கு நல்லிணக்கம் ஏற்படாது. அத்துடன் இது பிரிவினைவாதத்திற்கு உந்துசக்தியை கொடுப்பதாகவும் எனவும் முஸ்ஸாமில் குறிப்பிட்டுள்ளார்.