‘எனக்கே சுதந்திரமில்லை’ , கூட்டு எதிர்க்கட்சியினருடன் இணைந்து கொள்ளப் போகின்றேன் !

mahintha rajapakse

 

‘எனக்கே சுதந்திரமில்லை’ என முன்னாள் ஜனாதிபதி ஊடகங்களிடம் புலம்பத் தொடங்கியுள்ளார்.

தமக்கு சுதந்திரமில்லாத நிலையில் தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திரம் காணப்படுவதகத் தெரிவித்த போதிலும் உண்மையில் சுதந்திரம் கிடையாது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினர் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதில்லை எனவும் தாமும் கூட்டு எதிர்க்கட்சியினருடன் இணைந்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிதாக அரசியல் கட்சியொன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

புதிதாக ஆரம்பிக்கப்படும் கட்சியில் சுமார் 95 வீதமான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் இணைந்து கொள்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் செல்லும் இடங்களில் எல்லாம் புதிய கட்சியொன்றை அமைக்குமாறு மக்கள் கோரி நிற்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியை 20 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது என்ற கருத்தை நிராகரிப்பதாகவும், தாமும் அவ்வாறு நினைத்தே ஆட்சி செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.