புதிய ஆசிரியர்களுக்கான முதலமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

naseer

முதலமைச்சர் ஊடகப்பிரிவு

கிழக்கு மாகாண புதிய ஆசிரியர் நியமன விடையத்தில் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் மனிதநேயமற்ற முறையில் செயற்பட்டு, கிழக்கில் உள்ள பல  பாடசாலைகளில் ஆசிரியர்களின் தேவை இருந்தும் கிழக்கிற்கு ஆசிரியர்கள் பூரணமாக இருக்கிறார்கள் என்று அறிவித்து தன்னிச்சையாக முடிவு வழங்கியமையினால் இன்று அனைத்து ஆசிரியர்களுக்கும் வெளிமாகாணங்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

 எனவே முதலமைச்சரின் பணிப்பின் பெயரில் நியமனம் பெற்ற அனைத்து ஆசிரியர்களும் தங்களது நியமனம் மற்றும் தொலைபேசி இலக்கம் முகவரி போன்ற விடையங்களை எழுதி முதலமைச்சரின் ஊடகப்பிரிவின் ஈமைல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். எதிர்வரும் 13ஆம் திகதி புதன்கிழமை முதலமைச்சரைச் சந்திக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படவிருப்பதால் குறிப்பிட்ட ஈமைல் முகவரிக்கு உங்கள் தகவல்களைத் தெரிவிக்கவும். media.eastcm@gmail.com