ஒரு நாட்டின் தேசியகீதம் ஒரு மொழியிலேயே பாடப்பட வேண்டும் : மஹிந்த !

Mahinda-Rajapaksa_2806986b
 இலங்கையின் தேசியகீதம் எதிர்வரும் சுதந்திரதின நிகழ்வில் தமிழில் பாடப்படுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவை சந்தோசப்படுத்தவே அரசாங்கம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக மஹிந்த குற்றம் சுமத்தியுள்ளார். 

ஒரு நாட்டின் தேசியகீதம் ஒரு மொழியிலேயே பாடப்பட வேண்டும். இரண்டு மூன்று மொழிகளில் பாடப்படக்கூடாது. 

இதேவேளை இந்தியாவில்  பல மொழிகள் உள்ள போதும் தேசியகீதம் ஒரு மொழியிலேயே பாடப்படுகிறது என்று ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.