யோஷித ராஜபக்ஸ உட்பட நால்வர் கைது!

kilinochchi_yosiththa_002
பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித ராஜபக்ஸ சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அவர் கடுவளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார். 

இதேவேளை முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளரும் CSN நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பதிகாரியுமான ரொஹான் வெலிவிட்ட, அர்ஜுண ரணதுங்கவின் சகோதரர் நிஷாந்த ரணதுங்க, உள்ளிட்ட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

யோஷித நீதிமன்றத்தில் ஆஜர்

கடற்படைத் தளத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் யோஷித ராஜபக்ஸ தற்போது கடுவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். 

நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார். 

நீதிமன்றத்திற்கு முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நாமல் ராஜபக்ஸ, ஷிரந்தி ராஜபக்ஸ ஆகியோரும் வருகை தந்துள்ளனர்.