மெகாபொலிஸ் மாநகர அபிவிருத்தி வேலை திட்டத்தை பல நகரங்களிலும் செயற்படுத்தவுள்ளோம் : பிரதமர் !

நாட்டை பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்டவதற்கு மேலும் பல வேலை திட்டங்களை முன்னெடுக்க இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங் கூறியுள்ளார். 

Ranil-Wickramasinghe

மெகாபொலிஸ் மாநகர அபிவிருத்தி வேலை திட்டத்தை மேலும் பல நகரங்களிலும் செயற்படுத்த இருப்பதாகவும் அவர் கூறினார். 

மாநகர அபிவிருத்தித் திட்டங்களை கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

நாட்டின் பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டமான இது, 15 ஆண்டுகளில் செயற்படுத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இந்த திட்டம் 40 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. 

ஜப்பான் நாட்டின் உதவியுடன் கண்டி நகரத்தையும் அபிவிருத்தி செய்வதாக பிரதமர் தெரிவித்துள்ளார். 

திருகோணமலையிலும் விஷேட பொருளாதார வலயம் ஒன்று ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங் கூறியுள்ளார்.