வலிநிவாரண மாத்திரைகள் ஏற்படுத்தும் பக்கவிளைவுகள்!

jiu_rf_photo_of_pain_relievers
சிலர் என்ன உடல் வலி என்றாலும் உடனேயே  ஒரு மாத்திரையை வாயில் போட்டு விடுவார்கள். சிலர், அவர்களது பர்ஸ் அல்லது கைப்பையில் எப்போதுமே இந்த வலிநிவாரண மாத்திரைகளை வைத்திருப்பார்கள். வலிநிவாரண மாத்திரைகள் சாப்பிடுவதால் அந்த நேரத்தில் வலி குறைந்தாலும் கூட இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது….. 

* வலி நிவாரணி மாத்திரை உட்கொள்வதால் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் பெராக்சைடு கல்லீரல் சேதம் ஏற்படுகிறது. எட்டுக்கும் அதிகமான அளவில் வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொள்வதால் கல்லீரலில் மிகுதியான சேதம் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் மது அருந்துபவர் கட்டாயம் வலி நிவாரணி மாத்திரையை உட்கொள்ள கூடாது. 

* இப்யூபுரூஃபன், ஆஸ்பிரின் மற்றும் நேப்ரோஜென் போன்ற வலி நிவாரணி மாத்திரைகளினால் ஏற்படும் எரிச்சலின் காரணமாக வயிறு வலி, அல்சர் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. 

* வலி நிவாரண மாத்திரை உட்கொள்ளும் நபர்கள் மத்தியில் மன அழுத்தம் பாதிப்பு அதிகம் இருக்கிறது. 

* அதிகமாக வலிநிவாரணி மாத்திரை உட்கொள்வதால் சிறுநீரகம் பாதிப்படைகிறது. 

* கருவுற்ற முதல் இருபது வாரங்களில் வலிநிவாரணி மாத்திரை எடுத்துக் கொள்ளவே கூடாது, இதனால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.