அனுமதிப்பத்திரமின்றி மூன்று மாடுகளை லொறியில் கொண்டு சென்ற இருவர் கைது!

எப்.முபாரக்                  

 

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் தோப்பூர் பிரதேசத்திலிருந்து கொழும்புக்குச் லொறியொன்றில் மூன்று மாடுகளை கொண்டு சென்ற இருவரை அக்போபுர பொலிஸார் புதன்கிழமை (20)மாலையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.                         

 

அனுமதிப்பத்திரமின்றி லொறியொன்றில் மூன்று மாடுகளை கொண்டு சென்ற போது வீதிப் போக்குவரத்து பொலிஸாரினால் குறித்த லொறியை நிறுத்தி சோதனையிட்ட போது லொறியின் அனைத்து வாயிற் பக்கங்களும் மூடப்பட்ட நிலையில் லோறியில் மூன்று மாடுகளை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.                          

 

லொறியின் சாரதியையும் உதவியாளரையும் கைது செய்து தடுத்து வைத்துள்ளதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும்அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.     சந்தேக நபர்கள் மாடுகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட லொறியும் மாடுகளும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.