குணவர்த்தனவின் பதவி வெற்றிடத்திற்கு புதிய ஒருவரை பிரதமர் நாடு திரும்பியதும் தெரிவு!

kabeer
மறைந்த அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தனவின் பதவி வெற்றிடத்திற்கு, புதிய ஒருவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதும் தெரிவு செய்யவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு தெரிவாகி, காணி அமைச்சராக பதவி வகித்து வந்த எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தன நேற்றையதினம் காலமானார். 

இந்தநிலையில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் தொடர்பில் கருத்து வௌியிட்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுவிசர்லாந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.