சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொலைவெறி தாக்குதலில் 135 பேர் பலி !

சிரியாவில் அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் டெய்ர் எஸர் நகரின்மீது நடத்திய கொலைவெறி தாக்குதலில் 135 பேர் உயிரிழந்தனர்.

f9bee8ec-38ab-40ca-bb4d-82268760c30b_S_secvpf

கிழக்கு சிரியாவில் உள்ள டெய்ர் எஸர் நகரை கைப்பற்றும் நோக்கத்தில் பீரங்கி வாகனங்களுடன் வந்த ஐ.எஸ். தீவிரவாதிகள், குண்டுகளை வீசியும், இயந்திர துப்பாக்கிகளால் சுட்டும் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 85 பேரும், சிரியா ராணுவப்படை மற்றும் அதிபரின் ஆதரவாளர் படைகளை சேர்ந்த 50 பேரும் என 135 பேர் பலியானதாகவும், நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த கோரக்காட்சியை நேரில் பார்த்த சிலர் பலி எண்ணிக்கை இருநூறை எட்டியுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.