மயில் மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு சொந்தமான பெருமளவு தங்க நகைகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படும் பெலவத்தை மயில் மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
peacock-palace-050415-seithy (2)

பிரபல வர்த்தகர் லியனகேயிற்கு சொந்தமான அந்த ஆடம்பர மாளிகையின் நீச்சல் தடாகத்திற்குள் முன்னாள் ஜனாதிபதிக்கு சொந்தமான பெருமளவு நகைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையிலேயே பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். 

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் உயர்மட்டத்தில் ஆராயப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்