11ம் திகதி வரை விளக்கமறியல் !

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நிதி மோசடி பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.