ஹிருணிகாவின் ஆதரவாளர்கள் எட்டு பேர் நீதிமன்றத்தில் !

hirunica-1
  இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவின் ஆதரவாளர்கள் எட்டு பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

அத்துடன் குறித்த நபர்களை அடையாள அணிவகுப்பில் உட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடத்தல் பிரச்சினை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஆறு பேரை கைது செய்திருந்த நிலையில் மேலும் இரண்டு பேர் கொழும்பு குற்றவிசாரணைப் பிரிவில் சரணடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையிலேயே இவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.