ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல்!

images
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆப்கானின் மசார்-ஐ.ஷரிப் நகரத்தில் உள்ள இந்திய தூரகத்தின் மீது இன்று மாலை முதல் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். தூதரக கட்டத்தின் உள்ளே நுழைய முயன்ற தீவிரவாதிகளை பாதுப்பு படையினர் தடுத்து தாக்குதல் நடத்தியதை அடுத்து, அருகில் உள்ள கட்டிடங்களில் மறைந்திருந்தப்படி துப்பாகிகள் மற்றும் வெடுகுண்டுகள் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். 

4 தீவிரவாதிகளில் இரண்டு பேரை ஆப்கான் சிறப்பு பாதுகாப்பு படைகள் சுட்டுக்கொன்று விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்திய தரப்பில் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது பற்றி விபரங்கள் இதுவரை தெரியவில்லை.