பிரித்தானியா அமைச்சர் ஹுகோ ஸ்வைரி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் !

Unknown
பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலக இராஜாங்க அமைச்சர் ஹுகோ ஸ்வைரி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அவரின் இந்த விஜயத்தின் போது அரசாங்கம் மற்றும் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுடனும் சந்திப்புக்களை நடத்தவுள்ளார். 

கடந்த ஆகஸ்ட்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் இலங்கையுடன் இணைந்து செயற்பட பிரித்தானியா தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளது. 

மங்கள சமரவீர மீண்டும் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றதை அடுத்து ராஜாங்க அமைச்சர் ஸ்வைரி இந்த விருப்பத்தை அவரிடம் வெளியிட்டிருந்தாமை குறிப்பிடத்தக்கது.