சவுதி தூதரகத்தின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்: ஈரானில் 40 பேர் கைது!

960664cf-380d-4bdf-9ae5-71f9a1da2478_S_secvpf

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஷியா பிரிவு தலைவர்  நிம்ர் அல் நிம்ர்(56) உட்பட நேற்று ஒரே நாளில் 47 பேருக்கு சவுதி அரேபியா அரசு மரண தண்டனையை  நிறைவேற்றியது. நிம்ர் அல் நிமருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியதற்கு, ஷியா ஆதரவு ஈரான் அரசு கடும் எச்சரிக்கை விடுத்தது. இதற்கு கடும் விலை கொடுக்க வேண்டி வரும் எனவும் ஈரான் கூறியிருந்தது.

இந்நிலையில், தெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகம் முன் போராட்டம் நடத்தியவர்கள், பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த பகுதியே போர்க்களமாகக் காட்சியளித்தது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடித்து விரட்டிய போலீசார், தாக்குதலுக்குக் காரணமான 40 பேரைக் கைது செய்துள்ளனர்.