பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை காலை விஷேட உரை!

Ranil-Wickramasinghe
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை காலை 09.30 அளவில் அலரி மாளிகையில் வைத்து விஷேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக, பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன் தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு லண்டன் சென்றிருந்த பிரதமர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளார். 

இவர் கடந்த டிசம்பர் 22ம் திகதி லண்டன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.