உலகின் இரண்டாவது மிகப்பெரிய முதலீட்டாளராக கருதப்படுகின்ற ஜோர்ஜ் சொரோஸ் நேற்று இலங்கை வருகை !

Unknown
உலகின் இரண்டாவது மிகப்பெரிய முதலீட்டாளராக கருதப்படுகின்ற ஜோர்ஜ் சொரோஸ் நேற்று இலங்கையை வந்தடைந்துள்ளார்.

அமெரிக்க பிரஜையான சொரோஸ் ஹங்கேரியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 

ஹொங்கொங் இலிருந்து இலங்கையை வந்தடைந்த அவருடன் அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகளும் இந்த பயணத்தில் இணைந்துகொண்டுள்ளனர். 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட பிரதிநிதிகளை அழைக்கும் பகுதியில் அவரை வரவேற்பதற்கு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு அவர் வரவேற்கப்பட்டுள்ளார். 

அத்தோடு விமான நிலையத்தில் விசேட பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.