திஸ்ஸ என்பவர் யார், யாருடைய சாரதி என்பதை அனைவரும் அறிவார்கள் : அமைச்சர் ராஜித !

thajudeen

பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் சம்பந்தமான நீதிமன்ற நடவடிக்கைகள் அடுத்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளதுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்படவிருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் முடிவடைந்துள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளின் கீழ் சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்படவுள்ளனர். இதன் காரணமாகவே அவர்கள் பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

இந்த எதிர்ப்புகளை நெறிப்படுத்தும் விதம், அதன் பிரதானிகள் யார் என்பது குறித்து எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

தாஜூடீனின் கொலை தொடர்பான விசாரணை முழுமையாக பூர்த்தியடைந்துள்ளது.

டிப்பெண்டர் வாகனம் யாருடையது, திஸ்ஸ என்பவர் யார், யாருடைய சாரதி என்பதை அனைவரும் அறிவார்கள். இது சம்பந்தமாக ராஜபக்ச குடும்பத்தினர் மீது குற்றம் சுமத்தப்படுகிறது எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.