கிழக்கில் ஆளனிப்பற்றாக்குறை உள்ள பாடசாலைகளை தேர்ந்தெடுத்து அங்குள்ள ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட மாவட்டப் பாடசாலைகளிலேயே நியமனங்களை வழங்க வேண்டும் – கல்வி அமைச்சர்

DSC_9556_Fotor

m~;ug; V rkj;

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பயிற்சிகளை முடித்து வெளியான ஆசிரியர்களுக்கு நியமனம் வெளி மாகாணங்கள், மாவட்டங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தலைமையிலான குழுவினர்  இன்று (05) கல்வி அமைச்சர் அக்கிலவிராஜ் காரியவசமை அவரது அமைச்சில் சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 1700க்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் எக்காரணம் கொண்டும் கிழக்கில் பயிற்சி முடித்த ஆசிரியர்களை வெளிமாவட்டங்களுக்கு அனுப்பும் முயற்சியை உடனே கைவிட்டு அவர்களுக்குரிய மாவட்டப் பாடசாலைகளிலேயே அவர்களை நியமிக்க வேண்டும் என்று ஸ்ரீ.மு.காங்கிரஸ் குழுவினர் கல்வி அமைச்சரை கேட்டுக்கொண்டனர்.

கிழக்கில் தமிழ் மொழி பாடசாலைகளில் ஆசிரியர்களின் தேவையேதும் இல்லை என்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிக்கை சமர்ப்பித்ததன் காரணமாகவே குறிப்பிட்ட ஆசிரியர்களை வெளிமாகாணத்துக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அடங்கிய குழுவிடம் தெரிவித்தார்.

இதன்போது கல்வி அமைச்சர் அக்கிலவிராஜ் இது சம்மந்தமாக உடனடியாக சம்மந்தப்பட்ட கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் கல்வி அதிகாரிகள் உடனடியாக கிழக்கில் ஆளனிப்பற்றாக்குறை உள்ள பாடசாலைகளை தேர்ந்தெடுத்து அங்குள்ள ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட மாவட்டப் பாடசாலைகளிலேயே நியமனங்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இச்சந்திப்பில் ஸ்ரீ.மு.கா தலைவரும் நகர அபிவிருத்தி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், இராஜாங்க சுகாதார அமைச்சர் எம்.ரி.ஹஸன் அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர், போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தெளபீக், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், ஆகியோருடன் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.நிஸாம் மற்றும் அமைச்சின் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

DSC_9560_Fotor DSC_9561_Fotor DSC_9573_Fotor