இளைஞர் சமூகத்துக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு இடமளிக்கப்போவதில்லை !

maiththiri

இளைஞர் சமூகத்துக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்களை ஏற்பாடு செய்வதற்கு யாருக்கும் இடமளிக்கப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அம்பாறை டி எஸ் சேனாநாயக்க தேசிய பாடசாலையில் இடம்பெற்ற அனைத்து பாடசாலை மாணவர்களின் திறன் மதிப்பீட்டுக்கான பரிசு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

பணத்திற்கு பின்னால் செல்லமால் நல்லவை மற்றும் தீயவை குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு ஜனாதிபதி மாணவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.