கவிதை நூல் வெளியீட்டு விழாவும் கவிஞர்கள் கௌரவிப்பும் !

P1050476_Fotor
பி. முஹாஜிரீன்
பாலமுனை பஸ்மில் ஏ கபூர் எழுதிய ‘இரண்டாம் உயிர்’ கவிதை நூல் வெளியீட்டு விழாவும் கவிஞர்கள் கௌரவிப்பும் நிகழ்வு நேற்று (26) சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
டொக்டர் எஸ்.எம். றிபாஸ்தீன் தலைமையில் பாலமுனை இப்னு சீனா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல், நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
P1050479_Fotor
நூலின் கருத்துரையை தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் கலாநிதி ரமீஸ் அப்துல்லாஹ் நிகழ்த்தினார். நூலின் அறிமுக உரையை கவிஞர் கலாபூஷணம் ஆசுகவி அன்புடீனும் நூல் நயவுரையை கவிஞர் பா Vந்தல் பாலமுனை பாறூக்கும் நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் உயரதிகாரிகள், இலக்கியவாதிகள், ஆசிரியர்கள், சமூக சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள்; எனப் பலர் கலந்து கொண்டனர்.
P1050472_Fotor
P1050514_Fotor
P1050477_Fotor
P1050481_Fotor
P1050485_Fotor