473 பேருடன் பாரிஸ் சென்ற ஏர் பிரான்ஸ் விமானம் கென்யாவில் அவசர தரையிறக்கம் !

 

பிரான்ஸ் விமானத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருள் பயங்கர வெடிகுண்டு என கென்யாவின் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். 

விமானத்தின் கழிவறையில் சந்தேகப்படும்படியான பொருள் இருப்பதாக தகவல் கிடைத்தவுடன், விமானத்தினை கென்யாவில் திருப்பி விட்டு தரையிறக்கியதால் பெரும் விபத்தும் உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டுள்ளது. 

இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் 459 பேரும் 14 விமான ஊழியர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர்.