மஹிந்த ராஜபக்ச புலிகளுடன் தொடர்பு பேணவில்லை என்பதனை இந்த நாட்டு மக்கள் அறிவார்கள் : நாமல் !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு பேணவில்லை என்பதனை இந்த நாட்டு மக்கள் அறிவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
z_p03-Namal-Rajapaksa

இந்த விடயத்தை ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா அறியாமல் இருந்திருக்கலாம் எனினும், ஐக்கிய இலங்கையில் சுதந்திரத்தை அனுபவித்து வரும் மக்கள் அறிவார்கள். 

ஏதேனும் ஓர் சந்தர்ப்பத்தில் ஒரு தரப்புடன் மஹிந்த டீல் போட்டிருந்தால் அந்த தரப்பை கடைசிவரை காட்டிக் கொடுக்காத உயர்ந்த உள்ளம் கொண்ட அரசியல்வாதியாக மஹிந்த திகழ்கின்றார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகள் இருக்கும் வரையில் கட்சி ஆதரவாளர்கள் அதனுடன் இருப்பார்கள். தூய்மையான சுதந்திரக் கட்சியை கட்டிக் காக்க வேண்டியது கட்சியின் அரசியல்வாதிகளது கடமையாகும். 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சொந்தக்காரர்கள் எவருமில்லை. 

சுதந்திரக் கட்சி மஹிந்தவின் சொந்த சொத்து அல்ல என்பதனை நான் நன்கு அறிவேன். 

சுதந்திரக் கட்சி வேறு எவரினதும் சொத்து அல்ல என்பதனையும் தாம் அறிந்து வைத்துள்ளதாக நாமல் ராஜபக்ச சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார். 

அண்மையில் ராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்சவையும் மஹிந்த ராஜபக்சவையும் கடுமையாக சாடி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டதற்கு பதிலளிக்கும் வகையில் இந்த கருத்துக்களை நாமல் வெளியிட்டுள்ளார்.