மனித உரிமைகள் குறித்து அவுஸ்திரேலியா இலங்கையுடன் பேச்சு!

அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இதில் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் என்பன முக்கியத்துவம் பெற்றிருந்தன என்று அவுஸ்திரேலியாவின் கொழும்பு உயர்ஸ்தானிகரம் அறிவித்துள்ளது. 

Unknown

அவுஸ்திரேலியாவின் வெளியுறவு திணைக்கள உதவி செயலாளர் ரிக் வெல்ஸ் தலைமையிலான குழுவினர் இந்த வாரம் இலங்கையில் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். 

இந்தநிலையில் அவர்கள் இலங்கையின் வெளியுறவு அமைச்சின் மேலதிக செயலாளர் ரஞ்சித் உயன்கொட உட்பட்டவர்களை அவர்கள் சந்தித்துள்ளனர். 

இதன்போது இலங்கை புதிய அரசாங்கத்தின் பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய அதிகாரிகள் பாராட்டியுள்ளதாக உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது.