கவிஞர் வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது !

புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்துக்குள் நாளை காலை திருவள்ளுவர் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் மத்திய அமைச்சர்கள் வெங்கைய நாயுடு, ஸ்மிருதி இரானி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்துக் கட்சி தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். 
vairamuthu-hospitalized
தமிழ்நாட்டில் இருந்து திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில் பரிசுபெற்ற 133 மாணவ மாணவிகள் அதில் கலந்துகொண்டு நாடாளுமன்ற வளாகத்துக்குள் திருக்குறள் ஓதுகிறார்கள். இந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. மற்றும் கல்வியாளர் வா.செ.குழந்தைசாமி, பொன்னம்பல அடிகளார், தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் ஆகியோருக்கு திருவள்ளுவர் சிறப்பு விருது வழங்கப்படுகிறது. 

திருக்குறள் ஒப்புவிக்கும் குழந்தைகள் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியோடு சிறப்புப் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். திருவள்ளுவரை இந்தியா முழுவதும் கொண்டு செல்லும் முயற்சி இது என்று விழாவை ஏற்பாடு செய்து வரும் தருண் விஜய் எம்.பி தெரிவித்துள்ளார்.