மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியுடன் இலங்கை ஜனாதிபதி விமானத்தில் சந்திப்பு!

 

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூன் அப்துல் கையூமும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்
gayoom_maithri_001

இந்த சந்திப்பு எமிரேட்ஸ் விமானத்தில் வைத்து நிகழ்ந்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரோம் நகருக்கு செல்வதற்காக முதலில் துபாயிக்கு சென்றார். இதன்போது அதே விமானத்தில் அப்துல் கையூமும் பயணம் செய்துள்ளார்.

இதன்போதே இருவரும் சந்தித்துக்கொண்டனர். இந்த சந்திப்பு ஒரு வரப்பிரசாதம் என்று கையூம் தமது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.  அவர் தமது டுவிட்டரில் மைத்திபாலவை சந்தித்த புகைப்படத்தையும் பிரசுரித்துள்ளார்.