31வது அரச கலாபூஷண விருது வழங்கள் வைபவம் நாளை!

ஏ.எஸ்.எம்.ஜாவித்

வருடாவருடம் அரசினால் கலை, கலாச்சார துறைகளில் உன்னதமான சேவையாற்றிய கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் அரசின் 31வது அரச கலாபூஷண விருது வழங்கும் நிகழ்வு நாளை (15) முற்பகல் 10.00 மணிக்கு மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தின் ‘ஸ்ரீலங்கா யூத்’ மண்டபத்தில் உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ. நாவின்னவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம் பெறவுள்ளது.

 

கலாசார அலுவல்கள் திணைக்களம், உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பன ஒன்றினைந்து நடாத்தும் இவ்விழாவில் இவ்வருடமும் மூவினத்தைச் சேர்ந்தவர்களுக்குமான கலாபூஷண விருது வழங்கி கௌரவிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

WP_20151214_21_56_51_Pro