ரஷியா மனநல ஆஸ்பத்திரியில் தீ விபத்து : 21 பேர் பலி !

தெற்கு ரஷியாவில் உள்ள வொரேனேழ் மாகாணத்தில் உள்ள பழங்கால மனநல ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர்.

f-2
இவர்களில் 19 பேர் சம்பவ இடத்திலும், தீப்புண் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் இருவரும் பலியானதையடுத்து மொத்தம் 21 மனநோயாளிகள் இந்த விபத்தில் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தீ விபத்தில் மரத்தினால் ஆன கட்டிடத்தை கொண்ட அந்த மனநல ஆஸ்பத்திரி முழுவதுமாக எரிந்து நாசமடைந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.