மகிந்தராஜபக்சவின் தந்தையின் அருங் காட்சியகத்தை அமைப்பதற்கு 90மில்லியன் அரசநிதி ஓதுக்கப்பட்டுள்ளது !

வீரக்கெட்டியவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் தந்தை டீஏ ராஜபக்சவின் அருங்காட்சியகத்திற்கு சென்ற நிதிகுற்றச்செயல்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸ்பிரிவை சேர்ந்தவர்கள்,  குறிப்பிட்ட அருங்காட்சியகத்தை அமைப்பதற்கு 90மில்லியன் அரசநிதி ஓதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுவது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

HE_President_declares_opens_DA_Rajapaksa_Museum_20141107_02p4

பொலிஸாருடன் குறிப்பிட்ட அருங்காட்சியகத்தின் பெறுமதி குறித்து விசாரிப்பதற்காக அதிகாரிகளும் நேற்றுசென்றுள்ளனர். முன்னைய ராஜபக்ச அரசாங்கம் குறிப்பிட்ட அருங்காட்சியகத்தை அமைப்பதற்கு 90 மில்லியனிற்கு மேல்அரசநிதி பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

HE_President_declares_opens_DA_Rajapaksa_Museum_20141107_02p2