திருகோணமலையில் 1090மில்லி கிராம் கஞ்சாவைத் வைத்திருந்தவருக்கு பத்தாயிரம் ரூபாய் தண்டம்!

எப்.முபாரக்                     

  திருகோணமலையில் 1090 மில்லிகிராம்கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த ஒருவருக்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறு இன்று புதன்கிழமை (9)தீர்ப்பளித்துள்ளது.                       

  திருகோணமலை மரத்தடி பகுதியைச் சேர்ந்த எஸ்.ஏ.அஜந்த குமார வயது (36)என்பவருக்கே அத்தண்டப்  பணம் விதிக்கப்பட்டுள்ளது.              செவ்வாய் கிழமை(8)திருகோணமலை மீன் சந்தைக் கட்டிடத் தொகுதியில்  1090மில்லி கிராம் கஞ்சாவைத் தம் வசம்  வைத்திருந்த போது திருகோணமலை பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ஹயான் மீ ஹககே முன்னிலையில் ஆஜர்படுத்திய போது சந்தேக நபருக்கு பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணத்தினை செலுத்துமாறும் அதனைத் செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒருமாதம் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.