பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் : மஹிந்த ராஜபக்ச !

Mahi saddddd_CI

 முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் அளவு போதாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு செயலாளர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

தற்போதைய அரசாங்கத்தால் புனர்வாழ்வளிக்கப்படாத முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்வதால் அவரது பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இவ்வாறு இவர்களை விடுவிப்பதாயின் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தற்போது பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ள படையினரின் தொகையை அதிகரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் மஹிந்த தவிர்த்து யுத்தத்துடன் தொடர்புடைய சிவில் மற்றும் பாதுகாப்பு தரப்பு அதிகாரிகளின் பாதுகாப்புக்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.