வெள்ள பாதிப்புகளை பார்வையிட டிசம்பர் 8-ல் சென்னை வருகிறார் ராகுல்காந்தி?

சென்னையில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதற்காக காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) சென்னை வருகின்றார். 
Unknown

தமிழகத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் தீவிரமான பருவமழை காரணமாக சென்னை, கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அதிக அளவில் மழை கொட்டித் தீர்த்தது. இதில் சென்னை நகரம் இரு பெருமழையினால் வெள்ளக்காடானது. 

மக்களின் இயல்வு வாழ்க்கை பெருமளவு முடங்கியதோடு, மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இதுவரை சுமார் 250 பேர் இறந்துள்ளனர். தற்போது இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் மின்விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை நகரை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டிசம்பர் 8 ஆம் தேதி பார்வையிட உள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன.