சென்னையில் நாளை முதல் முழுமையான விமான சேவை!

 

கடும் மழை வெள்ளத்தால் மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையம் நாளை முதல் முழுமையான விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CHENNAI_AIRPORT_27333f

இது தொடர்பாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாளை முதல் உள்நாடு, சர்வேதேச விமான சேவைகள் உள்பட அனைத்து விதமான விமான வேவைகளும் தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 

பகல் மட்டும் அல்லாமல் இரவிலும் விமான சேவை இருக்கும் என இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.