போட்டித் தொடரை உறுதி செய்ய இந்தியாவுக்கு நாளை வரை கெடு : பாகிஸ்தான் அறிவிப்பு !

India-Vs-Pakistan-620x330

 இந்தியா–பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டித் தொடரை மீண்டும் நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முடிவு செய்து இருந்தன.

அதன்படி இரு அணிகள் இடையே 3 ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு 20 ஓவர் ஆட்டத்தை இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த போட்டித் தொடர் வருகிற 15–ந் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் இந்தியா– பாகிஸ்தான் போட்டிக்கு ஒப்புதல் கொடுத்தார். ஆனால் இந்திய அரசாங்கம் இதுவரை அனுமதி கொடுக்கவில்லை.

இதற்கிடையே போட்டித் தொடரை உறுதி செய்ய இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நாளை வரை கெடு விதித்து உள்ளது. நாளைக்குள் இந்திய அரசிடம் அனுமதி பெறாவிட்டால் போட்டித் தொடர் நடைபெறாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த கெடு காரணமாக மத்திய அரசின் அனுமதியை பெறும் முயற்சியில் கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.