தீவிரவாதிகளின் ராக்கெட் தாக்குதலில் ஏமன் நாட்டின் ஏடென் நகர கவர்னர் பலி ?

ஏமன் நாட்டின் கடற்கரை நகரமான ஏடென் நகர கவர்னர் ஜாபர் முஹம்மது சாத் இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானதாக அதிகாரபூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது. 

494041924
இங்குள்ள தவாஹி மாவட்டத்தில் பாதுகாப்பு வாகனங்களின் புடைசூழ சென்றுகொண்டிருந்தபோது ராக்கெட் மூலம் ஏவப்பட்ட கையெறி குண்டு தாக்குதலில் கவர்னர் ஜாபர் முஹம்மது சாத் மற்றும் அவரது பாதுகாப்பு படையைச் சேர்ந்த சிலர் கொல்லப்பட்டனர் என அந்நாட்டின் பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுவதாக பிரபல செய்தி நிறுவனமான ‘யூ.என்.ஐ.’ தெரிவித்துள்ளது.