ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த ஜெர்மனி அரசுக்கு அமைச்சரவை ஒப்புதல் !

சிரியாவில் அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துகட்டும் நடவடிக்கைகளில் ஜெர்மனி அரசும் களமிறங்க அந்நாட்டு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

1427221848670
இதுதொடர்பாக, நாளை நாடாளுமன்ற கீழ்சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர், அதிநவீன டோர்னாடோ ரக போர்விமானங்கள், இவ்விமானங்கள் பறந்து கொண்டிருக்கும்போதே நடுவானில் பெட்ரோல் நிரப்பும் வசதி கொண்ட விமானங்கள் மற்றும் சுமார் 1200 ராணுவ வீரர்கள் சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.